Thursday, October 1, 2009

தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களில்லை! - இந்துமதத்தின் இன்னொரு புறக்கனிப்பு!!

///காங்கியனூரில் ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு போலீஸ் தடியடி பெண்கள் உள்பட 111 பேர் சிறையில் அடைப்பு////

தோழர்களே! நண்பர்களே!!

மேற்கண்ட செய்தி நேற்றையதினம் (01.10.2009) திக்கதிர் என்கிற பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், காங்கியனூர் கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக் கொண்டு ஆலய நுழைவில் ஈடுபட்ட போது போலீசு தடியடி நடத்தி போராட்டக்காரர்களைக் கைது செய்துள்ளது. கே. பாலகிருஷ்ணன் என்கிற அக்கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரையும், லதா என்ற அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரையும் இன்னபிற மாவட்ட நிர்வாகிகளையும், அவர்கள் தலைமையில் திரண்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் திரளையும் போலீசு கொடூரமாகத் தாக்கியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களை இழிவுபடுத்துகின்ற வரலாற்றுப் பாரம்பரியமுடைய பார்ப்பன - இந்துமத பாரம்பரியத்தில் ஆதிக்க சாதிவெறியர்கள் தங்களது ஆதிக்க மையமாக கோவில்களைப் பயன்படுத்திவருகின்றனர். ஏறத்தாழ தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாகப் பேசி ஆலயத்திற்குள் விடாமல் துரத்தியடிக்கிறது இந்துமதக் கோயில்கள். ஆதிக்க சாதி வெறிக்கு எதிராக தன்னெழுச்சியாகப் போராடுகின்ற தாழ்த்தப்பட்ட மக்களையும்கூட அடக்கி ஒடுக்கி அகமகிழ்ந்து கொள்கிறது, ஆதிக்கசாதிவெறியின் ஏவல்நாயான போலீசு.

இந்துக்களின் ஒற்றுமை என்றும், இந்துக்களின் உரிமை என்றும் கொக்கரிக்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ராமகோபாலன், அர்ஜுன் சம்பத் போன்ற அம்பிகள் இக்கொடுமைகளைக் கண்டுகொள்வதில்லை அல்லது பெரும்பாலும் ஆதிக்க சாதிவெறியர்களைச் சார்ந்து நின்று கொள்கிறார்கள். இந்துக்களின் விரோதிகள் என்று இசுலாமியனையும், கிறித்தவனையும் போலிச்சித்திரங்களை உருவாக்கிக் காட்டி இந்துமதவெறியை வளர்த்துவரும் இந்த அயோக்கியர்கள், இந்துமதத்திற்குள் புழுத்து நாறும் இதுபோன்ற தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக இதுவரை எவன் மயிரையும் புடுங்கியதில்லை.

எனவே, சி.பி.எம். கட்சியின் தலைமையில் ஆலய நுழைவுக்குக் காத்திருந்த தாழ்த்தப்பட்ட மக்களை ‘இந்துக்கள் இல்லை’ என்று சொல்லி போலீசு நாய்கள் மூலம் அடித்து விரட்டி, மீண்டும் ஒருமுறை தம்மையும் ஒரு இந்து என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிற நமது தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கும் உலகத்துக்கும் உண்மையினை உணர்த்தியிருக்கிறது; ஆதிக்கசாதிவெறியும் இந்துமதமும். ”இதற்கும் இந்து மதத்துக்கும் என்ன தொடர்பு?” என்று இதைப் படித்தபிறகு கோபத்தில் கொந்தளிக்க விருக்கும் அம்பிகள், அறிவு நாணயத்துடன் இந்த அநீதியினைக் கண்டித்து இங்கு பதிவிடவேண்டும், இதைக் கண்டிக்கத்தவறிய ராமகோபாலன்களையும் கண்டிக்க வேண்டும், அதன் பிறகுதான் நம்மைக் கேள்வி கேட்க வேண்டும். செய்வார்களா?!

போகட்டும், ஆனால் இப்போராட்டம் குறித்தும், போலீசின் தடியடி குறித்தும் போலி கம்யூனிஸ்டுகள் வெளியிட்டு வரும் செய்தி ராமகோபாலனின் அரசியலைப் போன்றே குமட்டலெடுக்கக் கூடிய அயோக்கிய அரசியலாக இருக்கிறது. இப்போராட்டத்தை ஏதோ போலீசு-தலித் மக்கள் ஆகியோருக்கு இடையிலான மோதலாகத்தான் தொடர்ந்து சித்தரித்து எழுதிவருகிறது. போலீசை ஏவிவிட்டு பின்புலத்தில் தலைமறைத்துக் கொண்டு நிற்கும் பார்ப்பனிய-இந்துவெறி ஆதிக்க சாதியினை இவர்கள் அம்பலப்படுத்தியோ, கண்டித்தோ பேசுவதேயில்லை. மாறாக போலிசை ‘காவல்துறையின் அராஜகப் போக்கு’ என்றும் ‘தி.மு.க. அரசின் சதி’ என்றும்தான் எதிரிகளை அடையாளப்படுத்துகிறது.

உண்மையான எதிரியான பார்ப்பனிய பண்பாட்டையும் ஆதிக்க சாதிவெறியினையும் இவர்கள் எப்போதும் அம்பலப்படுத்தியதே இல்லை. அத்தோடு இவற்றை மூடி மறைக்கவும் இந்த போலி கம்யூனிஸ்டுகள் தயங்கியதில்லை. ‘காவல்துறை அராஜகம்’, என்றும் ‘தி.மு.க. அரசின் அராஜகம்’ என்றும் இவர்கள் கூப்பாடு போடுவதோடு பிரச்சினையை முடித்துக் கொள்வது, உண்மையான, முதன்மையான எதிரியினை நம்மிடத்திலிருந்து மறைப்பதற்காகத்தான். ஆனால், இதில் போலீசு அராஜகமோ, அரசின் நிலைப்பாடோ விமர்சிக்கப்பட வேண்டியதும் கண்டிக்கப்பட வேண்டியதுமாகும். இதில் நமக்கு எப்போதும் மாற்றுகருத்து கிடையாது. இப்போராட்டங்களின் மூலம் முதன்மையாக அம்பலப்படுத்தி மகக்ளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டியது இந்துமத வெறியும் ஆதிக்க சாதிவெறியும் தான் என்பது இப்போலிகளுக்கு உரைப்பதில்லை.

இது ஆர்.எஸ்.எஸ்., ராமகோபாலன்களின் கள்ள மவுனத்தைவிட, முதன்மைக் குற்றவாளியை மறைத்து, போலீசு ஏவல் நாய்களை மையப்படுத்திப் பேசுவது போன்ற போலிகள் செய்யும் சதிகள் அசிங்கமானதும், கேவலமானதும், அயோக்கியத்தனமானதுமாகும்.


தொடர்புடைய பதிவுகள்:

1. ஆலயத்துக்குள் மட்டுமா கருவறைக்குள்ளும் நுழைவோம்!


2. இந்துமதம் கேட்ட நரபலி!

Friday, January 30, 2009

எழுகிறான் மாவீரன் முத்துக்குமார் பல்லாயிரம் இளைஞர்களாக........


மாவீரன் முத்துக்குமாரின் உடல் சென்னையிலுள்ள கொளத்தூர் வியாபாரிகள் சங்கக் கட்டிடத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அவர் நேற்றைய தினம் தன்னைத் தீக்கிரையாக்கிக் கொள்வதற்கு முன்னால் நமக்களித்த, அவரது மரணத்தை விஞ்சும் இலக்கியத்தை உயர்த்திப்பிடித்தபடியே அங்கு திரண்டிருக்கும், எந்த ஒரு ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சியினையும் சார்ந்திருக்க விரும்பாத உணர்வாளர்களின் கட்டுப்பாட்டில் அவரது உடல் இருக்கிறது.

 

மத்தியில் ஆளும் காங்கிரசு, பார்ப்பன பாசிச ஜெயா கும்பல் இன்னபிற ஓட்டுப்பொறுக்கிகள் அந்தப் பக்கம் இன்னும் தலைவைத்தும் படுக்கவில்லை. திமுகவின் தலைமை வழக்கம்போல ஸ்டாலினைவிட்டு இரண்டு லட்சம் நிதியுதவியை வீரன் முத்துக்குமாரின் குடும்பத்தாருக்கு அறிவித்துவிட்டு, அப்பகுதியைச் சார்ந்த (புரசைவாக்கம்) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவை மட்டும் அஞ்சலி செலுத்த அனுப்பிவைத்தது. ஆனால், அங்கு திரண்டிருந்த உணர்வாளர்கள் கற்களையும் செருப்புகளையும் வீசியெறித்து வி.எஸ்.பாபுவை விரட்டியடித்துள்ளார்கள்.

 

இதிலிருந்து தியாகி முத்துக்குமாரின் மரணத்துக்கு முந்தைய வேண்டுகோள்களின் கூர்மையினை மொத்தமாக உள்வாங்கிக் கொண்ட உணர்ச்சிகரமான சூழல் நிலவுவதை நாம் உணரமுடிகிறது. அதுதான் அவரது தியாகத்துக்கு நாம் அளிக்கும் குறைந்த பட்ச மரியாதையுமாகும்.

 

நேற்றுவரை புலியரசியலில் கூவிக்கொண்டிருந்த வைக்கோ, பழ. நெடுமாறன் வகையறாக்களும் அங்கே தவறாமல் ஆஜராகியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அங்கு வந்த நோக்கம் அங்குள்ள இளைஞர்களால் எள்ளி நகையாடப்பட்டு அவமதிக்கப்பட்டிருக்கிறது.

 

எப்படியாவது இந்தப் பிரச்சினையை சுமூகமாக முடித்துவிடவேண்டிய நிலையில், ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளாக அங்கு வந்து, இன்றைக்குள் உடலை, அவசர அவசரமாக அடக்கம் செய்யத் துடிக்கிறார்கள் வைக்கோ வகையறாக்கள். வைக்கோ வழக்கமான மேடைகளைப்போல் நினைத்து அங்கே மேடையேறியவுடன், “பாசிச ஜெயாவுடன் கூட்டணிவைத்துக்கொண்டு.... இத்தனைக்கும் காரணமானவனே நீதாண்டா எறங்குடா கீழே....என்று அவரின் முகத்துக்கு நேரே உணர்ச்சிகரமாகக் குரல் கொடுத்தார்கள் சில இளைஞர்கள்.

 

இருப்பினும் அதனைக் கண்டுகொள்ளாததுபோல் தனது பேச்சை, நாடகத்தை, வசனத்தை வைக்கோ தொடந்து கொண்டேதான் இருந்திருக்கிறார். பழ. நெடுமாறனின் கதையும் அப்படிப்பட்டதே. இறுதியாக முத்துக்குமாரின் உடல் இன்றைக்குள் அடக்கம் செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாக உணர்வாளர்கள் நின்று கொண்டிருப்பதால் அவரது உடலை அடக்கம் செய்யமுடியாத சூழல் உருவாகியுள்ளது.

 

நாளை மாலை மூன்று மணியளவில் இறுதி ஊர்வலம் நடக்கலாம் என்கிற தகவலை வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வெள்ளையன் மேடையில் அறிவித்திருக்கிறார். அங்கு திரண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழலே நீடித்துவருகிறது.

 

என்னுடைய உடலை போலீசிடமிருந்து கைப்பற்றி, அதையே ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துங்கள்....என்கிற மாவீரன் முத்துக்குமாரின் வேண்டுகோள் மெய்யாகட்டும். ஈழ மக்களின் மீதான இந்திய-சிங்கள பாசிச அரசுகளின் இன அழிப்பின் மீதான உறுதியான தாக்குதலை நாம் தமிழகத்திலிருந்து தொடுப்போம்.

 

மாவீரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம்!