Wednesday, September 3, 2008

இந்துத்துவக் காலிகளை தெருவில்தான் சந்திக்க வேண்டும்....

யக்குனர் சீமானின் கூட்ட்டத்தில் பார்ப்பனீய / இந்துவெறி பயங்கரவாதிகளின் கொட்டம் அடக்கப்பட்டது.பெரும்பான்மையான மக்கள் தொகையில் வெறும் இரண்டரை சதவீத எண்ணிக்கையில் இருந்துகொண்டு, உழைப்பின் வாசனையைக் கூட அறிந்திராமல் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த சமூகத்தை, உழைக்கும் மக்களைச் சுரண்டி ஏப்பம் விட்டு தொந்திவளர்த்த பார்ப்பனீய நச்சுப் பாம்புகள், பூலேவும், அம்பேத்கரும், பெரியாரும் தலைமையேற்று நிகழ்த்திய பார்ப்பனீய / சாதீய இழிவு ஒழிப்பு போராட்டங்களில் தங்களது தலையை சற்று மடக்கி புற்றுக்குள் புகுந்துகொண்டன. அவை இன்று இந்துதர்மம், முசுலீம் எதிர்ப்பு, தேசபக்தி என்று வெவ்வேறு முகமூடியுடன் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியிருக்கின்றன.
பெரியார் ராமனை ஊர்வலமாக இழுத்துவந்து முச்சந்தியில் வைத்து செருப்பால் அடித்தபோதும், நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் தனது ‘கீமாயணம்’ நாடகத்தினூடாக ராமனையும் பார்ப்பனீயத்தையும் தோலுறித்து அம்மனமாக்கியபோதும் புற்றுக்குள்ளேயே செயலற்று சுருண்டு ‘பத்திரமாக’க் கிடந்த பார்ப்பனீய நச்சுப்பாம்புகள் இன்று மீண்டெழுந்து வருகின்றன.
காஷ்மீர் முதல் கருநாடகம் வரை இந்துத்துவ கொலை வெறிபிடித்து கொடட்டமடித்துத் திரியும் இந்த பார்ப்பனீயக் கும்பலுக்கு தமிழகம் பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதற்குக் காரணம் இது பெரியாரின் மண் என்பதும் பெரியாரின் வாரிசுகளாக நாம் பார்ப்பனீயத்துக்கு எதிராக உறுதியாக நிற்பதுவும்தான்.
தமிழகத்தில் தனது கலவரங்ளினூடாக கால்பதிக்க எண்ணிய இந்துத்துவ கும்பல் அதற்கு முதலில் தேர்ந்தெடுத்தது கோவையைத்தான். கலவர சகுனி ராமகோபாலனின் தலைமையில் கோவையில் அப்பாவி முசுலீம் மக்களுக்கு எதிராக கலவரங்களைத் தொடங்கினர். அதன் விளைவாக நடைபெற்ற குண்டு வெடிப்புகள், அப்பாவிகளின் கைதுகள் என்று இன்றும் கோவையில் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் மதவெறிப் பிரச்சினைகள் ஏராளம். இந்துவெறியைப் பொறுத்தவரை இதுபோன்ற கலவரங்களில் அப்பாவி மக்களின் ரத்தத்தைக் குடித்துதான் வளர்ந்திருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் இன்று அவர்கள் சொல்லிக்கொள்ளும்படி கொஞ்சம் வலுவாக (எண்ணிக்கையில்) இருக்கும் பகுதி கோவை – கவுண்டம்பாளையம் பகுதியாகும்.
இந்து மதத்துக்குள்ளே இருக்கின்ற சாதீய இழிவுகளுக்காக போராடாமல், யோக்கியமாக அவற்றுக்கு பதில் சொல்லாமல், வேற்று மதத்துக்காரர்களுக்கு எதிராக பீதியையும் பதற்றத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்துத்துவ வெறியர்களை சமரசமற்று கண்டிக்கும் விதமாகத்தான் தோழர் சீமான் அவர்களின் பேச்சு இருந்திருக்கிறது. தோழர் சீமானின் பேச்சு அப்பகுதியில் அவர்களின் இருத்தலை கேள்விக்குள்ளாக்குவதாக இருந்திருக்கிறது. அவர்களின் அஸ்திவாரத்தைப் பிடித்து உலுக்கும் விதமாக அவரது பேச்சு இருந்திருக்கிறது. அதனைப் பொறுக்க முடியாமல், பொதுவாக அப்பகுதியில் கந்துவட்டியும், கட்டைப்பஞ்சாயத்தும் மொள்ளமாறித்தனமும் முடிச்சவிக்கித்தனத்துக்கும் பெயர்போன இந்துத்துவ பொறுக்கிகள் “இதைத் தொடர்ந்து அனுமதித்தால் மக்களுக்கு நம்மேல் இருக்கும் பயம் (!) போய்விடுமே” என்கிற அவசரத்தில் நிகழ்த்திய தாக்குதல்தான் அது.
இந்துத்துவத்தி்ன் ஆணிவேர் பார்ப்பணியத்துக்குள்ளும் பார்ப்பனீயத்தி்ன் ஆணிவேர் இந்த சாதீய இழிவுகளுக்குள்ளும்தான் ஒளிந்திருக்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. நாம் சாதீய இழிவுகள் குறித்து கேள்வி எழுப்பினால் அது பார்ப்பனீயத்தின் குடுமியைப் பிடித்து் உலுக்குவதாக இருக்கிறது. அதனை தோழர் சீமான் சற்று அழுத்தமாகப் பிடித்து ஆட்டியதால்தான் இவ்வாறு பொதுக்கூட்டத்தில, நட்டநடு வீதியில் இந்துத்துவம் அம்மனமாக நின்றிருக்கிறது.
தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லி வாயில் ‘பீ’யைத் திணித்ததும், தேனி பள்ளப்பட்டியில் தாழ்த்தப்பட்டவன் வாயில் ‘மூத்திரத்தை’ அடித்ததும்கூட இந்த இந்துமதம்தான். அதனால்தான் இல்லாத ராமன் பாலத்துக்கும் ராமன் கோவனத்துக்கும் கண்டனக் கூட்டம் நடத்துகின்ற இந்துத்துவ கும்பல, சாதியத்துக்கு எதிராக பேசுவதில்லை. ஆனால், சாதீயத்துக்கு எதிராகப் பேசுபவர்களையும் பேச அனுமதிப்பதில்லை.

சாதீய இழிவுகளுடன் அழுகிநாறும் இந்துத்துவம், மக்களை ஏமாற்றுவதற்காக பராமரித்து வரும் யுக்திதான் பக்தி. நாம் பார்ப்பனீய இழிவுகளைக் குறித்து கேள்வியெழுப்பினால், தமது பூநூலை நீட்டி பக்திக்கும் சேர்த்து போட்டுக்கொண்டு், “அய்யோ பக்தியைக் கொச்சைப்படுத்திவிட்டார்கள், அய்யோ இந்து தெய்வங்களைக் கொச்சைப்படுத்திவிட்டார்கள்” என்றெல்லாம் கூப்பாடு போடுவார்கள். அதுதான் இச்சம்பவத்தினூடாகவும் நிகழ்ந்திருக்கிறது. தோழ்ர்கள் மீது ‘இந்து தெய்வங்களையும் பக்தியையும் கொச்சைப்படுத்திவிட்ட’தாகத்தான் வழக்கு பதிந்திருக்கிறார்கள்.
தெய்வம், பக்தி என்று இவர்கள் கொண்டாடும் கோயில்களில்தான், இந்துமதத்தில் பிறந்ததாகச் சொல்லப்படுகின்ற தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் வழிபட முடியாமல் விரட்டப்படுகின்றனர். புதைத்து புல் முளைத்து்விட்டதாக சிலர் சொல்லிக்கொள்ளும் தீண்டாமையின் முழு் உருவமாகத்தான் இன்றும் கோயில்கள் நின்று கொண்டிருக்கின்றன. இதிலெல்லாம் கொச்சைப்படாத இந்துத்துவ தெய்வங்கள்தான், தீண்டாமையை நாம் கேள்வி கேட்பதனால் இழிவாகிவிடுகின்றனவாம். இவர்கள் சொல்லும் ‘இந்துதர்மம்’ என்பது சாதீயத் தீண்டாமை இழிவுகளைப் போற்றிப் பாதுகாக்கும் ‘ஏற்பாடு’ மட்டுமதான்.
இப்படிப்பட்ட இந்துத்துவக் காலிகளை நாம் தெருவில் தான் சந்திக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாகத்தான் இருக்கிறது இச்சம்பவம். பெரியாரின் பூமியில் பார்ப்பனீய / இந்துத்துவ நச்சுப்பாம்புகளை தலைதூக்கவிடாமல் நசுக்குவோம். அந்த வகையில் தோழர் சீமான் அவர்களுக்கும் பெரியார் திராவிடர்கழகத் தோழர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தோழமையுடன்,
இரணியன்.

No comments: